Tuesday, January 27, 2015

..... கோலம்/ரங்கோலி..... புள்ளிக் கோலம்

புள்ளி கோலம் ராஜ்ஜியம் முடிந்து இன்று  ரங்கோலி ராஜ்ஜியம் நம் தமிழ் பெண்களுக்கிடையே பெரும் வரவேற்பை கண்டுள்ளது. மலேசியர்களை பொறுத்தவரையில் ரங்கோலி மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. 

பளீர் வண்ணத்தில் அரிசியுடன் வண்ணம் கலந்து விரும்பும் இடத்தில் எந்த அளவிலும் போடப்படும் இந்த வகை கோலம் திருமணங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதை வியாபாரமாக எடுத்து திறம்பட செய்பவர்களுக்கு நல்லதொரு வருமானம் உள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 
 இதற்க்கு இடையே வண்ண மணிகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் மற்றுமொரு கோலம் நமது இன்றைய பெண்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.நாகரீகத்தின் உச்சியில் நிற்கும் அனுபவமே இது ... :) இந்த மோகங்களுக்கிடையே புள்ளிக் கோலம் அழிந்து விடுமா என்ற பயமும் நம்மை ஆட்கொள்ள செய்கிறது. 



No comments: